முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
புறநானூறு - 345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார்
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)
களிறு அணைப்பக் கலங்கின, காஅ; தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு; மா மறுகலின் மயக்குற்றன, வழி; கலங் கழாஅலின், துறை கலக்குற்றன; தெறல் மறவர் இறை கூர்தலின், |
5 |
பொறை மலிந்து நிலன் நெளிய, வந்தோர் பலரே, வம்ப வேந்தர், பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின் ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக், கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, |
10 |
மையல் நோக்கின், தையலை நயந்தோர் அளியர் தாமே; இவள் தன்னை மாரே செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி, நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்; கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், |
15 |
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினும், அன்னோ ! என்னா வதுகொல் தானே- பன்னல் வேலிஇப் பணைநல் லூரே! |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 343 | 344 | 345 | 346 | 347 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!, ஓவியம், பன்னல், இலக்கியங்கள், கொண்ட, அவள், வரையப்பட்ட, துறை, வேந்தர், புறநானூறு, நல்லூர், வேலிப், படையெடுத்து, வந்த, கொண்டவள், வரையப்பட்டுள்ளது, வேலி, மறவர், திணை, சங்க, எட்டுத்தொகை, அவளது, மையல், காஞ்சி