முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 324. உலந்துழி உலக்கும்!
புறநானூறு - 324. உலந்துழி உலக்கும்!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப் புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய், வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை உடையின் சுரையுடை வால்முள் ஊக நுண்கோற் செறித்த அம்பின், |
5 |
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப், பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க், குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த வெண்வாழ் தாய வண்காற் பந்தர், |
10 |
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப், பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை, வலம்படு தானை வேந்தற்கு உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 322 | 323 | 324 | 325 | 326 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 324. உலந்துழி உலக்கும்!, உடையவர்கள், மக்கள், உலந்துழி, நெடுந்தகை, இலக்கியங்கள், உலக்கும், அந்த, புறநானூறு, அமர்ந்திருக்கும், என்னும், இருக்கும், கருப்பை, சங்க, எட்டுத்தொகை, வேட்டுவர், மகாஅர், புன்புலம், அம்பின், இடையன்