முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
புறநானூறு - 319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
பூவற் படுவிற் கூவல் தோண்டிய செங்கண் சின்னீர் பெய்த சீறில் முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி, யாம் கடு உண்டென, வறிது மாசின்று; படலை முன்றிற் சிறுதினை உணங்கல் |
5 |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால், முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண! கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி |
10 |
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும் சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 317 | 318 | 319 | 320 | 321 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 319. முயல் சுட்டவாயினும் தருவோம்!, இலக்கியங்கள், முயல், பாடினி, புறநானூறு, சுட்டவாயினும், தருவோம், உள்ளது, மன்னன், பாணன், அவன், சீறூர், தங்குங்கள், அதனால், சங்க, எட்டுத்தொகை, கூவல், தோண்டிய, முதுவாய்ப், ஆமான்