முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 31. வடநாட்டார் தூங்கார்!
புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால்
துஞ்சாக் கண்ணர் ஆயினமை. |
5 |
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே; நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே; போர் எனில் புகலும் புனைகழல் மறவர், |
10 |
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய; செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென் விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக், குண கடல் பின்ன தாகக், குட கடல் வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப, |
15 |
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத், துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!, இலக்கியங்கள், வடநாட்டார், புறநானூறு, தூங்கார், களிறு, நின், கடல், பின்தொடர்ந்து, குடை, மறவர், துஞ்சாக், சங்க, எட்டுத்தொகை, வடபுலத்து, அரசர்கள், பொருளும், இன்பமும்