புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண்.
துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல்.
செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றிவை |
5 |
சென்றளந்து அறிந்தார் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே அனைத்தும் அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக், களிறுகவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட |
10 |
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே! |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?, பாடுவர், இலக்கியங்கள், எங்ஙனம், புறநானூறு, புகுந்த, ஞாயிறு, விளாம்பழம், புலவர், இனைத்து, எட்டுத்தொகை, சங்க, எறிகல்