முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
புறநானூறு - 236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது.
கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும் மலை கெழு நாட! மா வண் பாரி கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே |
5 |
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி, இனையை ஆதலின் நினக்கு மற்றுயான் மேயினேன் அன்மை யானே; ஆயினும், இம்மை போலக் காட்டி, உம்மை |
10 |
இடையில் காட்சி நின்னோடு உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 234 | 235 | 236 | 237 | 238 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!, கலந்த, ஒவ்வாய், இலக்கியங்கள், கேண்மைக்கு, என்னை, புறநானூறு, நாட்டில், அந்த, ஒழிக, பெருந்தகு, எட்டுத்தொகை, சங்க, நட்பிற்கு