புறநானூறு - 233. பொய்யாய்ப் போக!
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
பொய்யா கியரோ! பொய்யா கியரோ! பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ! இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண், |
5 |
போர்அடு தானை, எவ்வி மார்பின் எகுஉறு விழுப்புண் பல என வைகறு விடியல், இயம்பிய குரலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 231 | 232 | 233 | 234 | 235 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 233. பொய்யாய்ப் போக!, என்னும், எவ்வி, இலக்கியங்கள், பொய்யாய்ப், விழுப்புண், கியரோ, புறநானூறு, பொய்யா, அவன், மார்பில், மாண்டான், புலவர், அரசன், பிழைத்துக்கொண்டான், இரும்பாண், எட்டுத்தொகை, சங்க, வெள்ளெருக்கிலையார், தலைவன், பெரும்பூண்