முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 225. வலம்புரி ஒலித்தது!
புறநானூறு - 225. வலம்புரி ஒலித்தது!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய, இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக், கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர, நிலமார் வையத்து வலமுறை வளைஇ, வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு, |
5 |
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக் கள்ளி போகிய களரியம் பறந்தலை, முள்ளுடை வியன்காட் டதுவே-நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்? இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத், |
10 |
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி, ஞாலங் காவலர் கடைத்தலைக், காலைத் தோன்றினும் நோகோ யானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 223 | 224 | 225 | 226 | 227 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 225. வலம்புரி ஒலித்தது!, நலங்கிள்ளி, வலம்புரி, இலக்கியங்கள், தின்னும், பனம்பழம், தின்னுமாம், செல்லும், காலம், சங்கு, புறநானூறு, ஒலித்தது, சங்க, எட்டுத்தொகை, வீசப்படும், கிழார், இப்படிப், நுங்கு, சோழன், கள்ளி, வழக்கம், அவன், பெரியது, இவனது, ஆற்றல்