முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 139. சாதல் அஞ்சாய் நீயே!
புறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே!
பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி.
சுவல் அழுந்தப் பல காய சில் லோதிப் பல்இளை ஞருமே, அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலிய ருமே, வாழ்தல் வேண்டிப் |
5 |
பொய் கூறேன்; மெய் கூறுவல்; ஓடாப் பூட்கை உரவோர் மருக! உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக், கனிபதம் பார்க்கும் காலை யன்றே; |
10 |
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள், அருஞ் சமம் வருகுவ தாயின், வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 137 | 138 | 139 | 140 | 141 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே!, சாதல், நீயே, இலக்கியங்கள், அஞ்சாய், புறநானூறு, பரிசில், கூறேன், மெய், பொய், வேண்டிப், எட்டுத்தொகை, வாழ்தல், சங்க