முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 138. நின்னை அறிந்தவர் யாரோ?
புறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ?
பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப் படை.
ஆனினம் கலித்த அதர்பல கடந்து, மானினம் கலித்த மலையின் ஒழிய, மீளினம் கலித்த துறைபல நீந்தி, உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! |
5 |
நீயே, பேரெண் ணலையே; நின்இறை, மாறி வா என மொழியலன் மாதோ; ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின், |
10 |
நின்னை வருதல் அறிந்தனர் யாரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 136 | 137 | 138 | 139 | 140 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ?, நின்னை, இலக்கியங்கள், அறிந்தவர், இனங்கள், துள்ளி, விளையாடும், யாரோ, கலித்த, புறநானூறு, எட்டுத்தொகை, சங்க, கணவன், கடந்து