முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 109. மூவேந்தர் முன் கபிலர்!
புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகண் மறுத்தல்.
அளிதோ தானே, பாரியது பறம்பே! நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; |
5 |
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே; நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து, திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே. வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
10 |
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே; சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
15 |
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 107 | 108 | 109 | 110 | 111 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!, உண்டு, இலக்கியங்கள், அவன், கபிலர், மூவேந்தர், யும்மே, நான்கு, செல்லுங்கள், முன், புறநானூறு, உங்கள், ஒன்று, போர், பரிசாக, முற்றுகை, அற்று, சங்க, எட்டுத்தொகை, உழவர், வான், ஆயினும், வானத்து, மூன்று