முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 84. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 84. வென்றிச் சிறப்பு
துறை : வாகை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தொழில் நவில் யானை
எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு, கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி, நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை, பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், |
5 |
பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய, மன்பதை சவட்டும் கூற்ற முன்ப! கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா; பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது, வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும், |
10 |
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல, உய்தல் யாவது-நின் உடற்றியோரே, வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ? போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல, |
15 |
நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து, முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு, உரும் எறி வரையின் களிறு நிலம் சேர, காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின் குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே- |
20 |
காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி, விண்டு முன்னிய புயல் நெடுங் காலை, கல் சேர்பு மா மழை தலைஇ, பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தொழில், நின், எழுந்து, காலை, களிறு, வேல், நவில், யானை, வண்ணம்