முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 75. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 75. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தீம் சேற்று யாணர்
இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம், அரும் பொறி வய மான் அனையை-பல் வேல், பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!- வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து, நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, |
5 |
அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர், வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை, வன் புலம் தழீஇ மென்பால் தோறும் அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து, கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் |
10 |
வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல் வல்சி அறியார், தம்தம் பாடல் சான்ற வைப்பின் நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அரும், யாணர், சேற்று, தீம், வண்ணம்