நற்றிணை - 267. நெய்தல்
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
5 |
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; சிறு நா ஒண் மணித் தௌ இசை கடுப்ப, இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
10 |
'இவை மகன்' என்னா அளவை, வய மான் தோன்றல் வந்து நின்றனனே. |
நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண்ணையுடைய மணலால் ஆகிய எக்கரின்கண் உள்ள பெரிய
சுற்றத்தையுடைய ஞெண்டின் கூட்டம; விளங்கிய பற்களின் அழகிய இனிய நகையையுடைய மாதர்கள்
வெயிலிலே காயுந் தினையைக் கைவிரலாலே துழாவி வருதல் போல மணம் வீசும் ஞாழலின்
உதிர்ந்த மலரைக் காலால் வரித்துக் கோலஞ் செய்யுந் துறையையுடைய தலைவனொடு; கூட்டிய
இனிய விருப்பத்தையுடைய கழிச் சோலையிலே அவளின்றித் தனியே நான் வருதல்; மிக
வருத்தமுடையதாய் இராநின்றது எனக் கருதி அதனால் பெரும்பாலும் வாராதிருந்த யான்;
முன்பு ஒருநாள் வந்துளேனாகி, சிறுநா ஒள் மணித் தௌ¢ இசை கடுப்ப இனம் மீன் ஆர்கை
ஈண்டு புள் ஒலிக்குரல் சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியின் தௌ¤ந்த ஓசையைப் போலக்
கூட்டமாகிய மீனைத் தின்னுகிறதற்கு வந்து கூடுகின்ற புள் ஒலிக்குங் குரலைக் கேட்டு;
இவ்வொலி தலைமகனது தேர் மணியோசை போலுமென்றுட்கொண்டு "இவ்வோசை தலைமகன்" என்று
சொல்லெடுக்கு முன்; வலிய குதிரையையுடைய தோன்றலாவான் ஆங்கு வந்து நின்றனன்;
இப்பொழுது அங்ஙனமும் காணாதபடி காவல் செய்தாயிற்று;
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம். - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 265 | 266 | 267 | 268 | 269 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வருதல், புள், வந்து, ஆர்கை, ஈண்டு, ஒலிக்குரல், இனிய, மீன், கடுப்ப, மணம், ஞெண்டின், தனியே, யான், மணித், அரும்பு