நற்றிணை - 179. பாலை
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
5 |
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, நெருநலும் அனையள்மன்னே; இன்றே, மை அணற் காளை பொய் புகலாக, அருஞ் சுரம் இறந்தனள் என்ப- தன் முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. |
10 |
மனை யகத்து முளைத்துப் படர்ந்த வயலைக் கொடியை ஆங்குக் கன்றையீன்ற பசுவானது சென்று தின்றதினாலே; அதுகண்டவுடன் தான் விளையாட்டயர்ந்துகொண்டிருந்த பந்தை நிலத்தெறிந்து போகட்டு ஒரையாடும் பாவையையும் அவ்வயின் வைத்துத் தனது அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட செய்யுங் காரியங்கள் வல்ல என் இளம்புதல்வி; மானின்பொருந்திய நோக்கம்போன்ற மையலைச் செய்யும் பார்வையுடனே; யானுஞ் செவிலித்தாயும் தேனொடு கலந்த இனிய பாலையருந்துகவென்று ஊட்டவும் உண்ணாது; விம்மி அழுபவளாகி நேற்றும் அத் தன்மையளாயிருந்தனள். அங்ஙனம் செய்வதெல்லாம் கழிந்தது; இன்று கறுத்த அணலையுடைய காளையாவானது பொய்ம் மொழியே தனக்குப் பற்றுக்கோடாகக்கொண்டு; முருந்துபோன்ற தன் வெளிய எயிறுகளிலே தோன்று நகையைத் தோற்றுவித்து உடன்பட்டுச் செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றொழிந்தனள் (என்று கூறுவர்); இத்தகைய இளமையுடையாள் எங்ஙனம் சென்று மனையறம் பூண்டு ஒழுகா நிற்குமென்று அஞ்சுகின்றேன்? எவ்வண்ணம் ஆற்றுவேன்;
மனை மருட்சி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 177 | 178 | 179 | 180 | 181 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சென்று, விம்மி, தேனொடு