நற்றிணை - 178. நெய்தல்
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன தோடு அமை தூவித் தடந் தாள் நாரை நலன் உணப்பட்ட நல்கூர் பேடை கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
5 |
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் காணவும் இயைந்தன்று மன்னே; நாணி நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, விளிந்தன்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே. |
10 |
அசைகின்ற மூங்கிலினுள்ளே உரிக்கப்படும் உரியை மடித்து மெல்லிதாகப் பிசைந்துவைத்தாலொத்த; தொகுதியமைந்த சிறகுகளையும் நீண்ட கால்களையும் உடைய நாரையினால்; இன்பம் நுகரப் பெற்ற செயலற்ற பேடை; கழிக்கரையிலே பெயருமிடங்களில் பெயர்ந்து சென்று சிறிய மீனையும் உண்ணாது, கைதை படுசினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் தாழையின் பெரிய கிளையின்கண்ணே வருத்தத்துடன் உறையாநிற்கும் மெல்லிய துறைகளையுடைய நம் காதலன்; ஊர்ந்துவரும் தேரானது முன்பு நம்முடைய கண்ணாலேனும் காணுதற்குப் பொருந்தியிருந்தது, இப்பொழுது அது கழிந்தது; ஏதில் மாதரார் ¢கூறுஞ் சிறு சொல்லை நம்பி நம் அன்னை இற்செறித்தலானே நாணமுற்று இரவு நடுயாமத்திலும் கண் துயில்கொளப் பெற்றிலேன்; அயலிலே பறவைகள் ஒலித்தல் அவர் தேரின் மணியொலிபோலிருத்தலால்; அவ்வொலியைக் கேட்டு முன்பு மிகத் தௌ¤ந்திருந்த பெருமையுடைய என்னெஞ்சமானது; இப்பொழுது அழிவு பொருந்தியதாயிற்று;
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 176 | 177 | 178 | 179 | 180 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தண்ணம், துறைவன், முன்பு, இப்பொழுது, வதியும், புலம்பொடு, சிறு, உண்ணாது, கைதை, பேடை