நற்றிணை - 181. முல்லை
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, வந்ததன் செவ்வி நோக்கி, பேடை நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
5 |
துவலையின் நனைந்த புறத்தது அயலது கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, கையற வந்த மையல் மாலை இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
10 |
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப வந்தன்று, பெருவிறல் தேரே; உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. |
மனையகத்துக் கூரையினுள்ளே உறைகின்ற கரிய தாழ்வாயையுடைய குருவியின் சேவல்; வேற்றுப்புலத்துச்சென்று ஆண்டுள்ள ஒரு குருவிப் பெடையொடு மற்றொரு சார்பிலே புகுந்து புணர்ந்து அங்கே சிறிதுபொழுது தாழ்த்திருந்து வருதலும் வந்ததனுடைய; மெய்யிலே புணர்குறி வாய்த்திருப்பதை நோக்கி அதற்குரிய பேடையானது நெறிப்பு விளங்கிய ஈங்கையின் பூவைப் போன்ற சிறிய பலவாகிய பிள்ளைகளுந் தானும் சேரநின்று; குடம்பையினுள்ளே புகுதாதபடி தடுத்தலினால்; மழையிலே நனைந்த புறத்தினதாகிப் பக்கத்தில் நடுங்கியிருப்பதை நோக்கி நெடும்பொழுது ஆராய்ந்து; அருள் கூர்ந்து இரக்கமுற்ற நெஞ்சத்தோடு தன்பால் வருமாறு அழைப்பக் குருவிச் சேவல் செயலற்று வாராநிற்கும்; மயக்கத்தையுடைய மாலைப்பொழுது வந்திறுத்ததாகலின்; இனிய ஒலியிழந்த மாலை அணிந்த புரவி மெல்லிய பயிர்களை மிதியாநிற்ப; பெரிய வெற்றியையுடைய தலைவரது தேர் வந்திறுத்தது; இனி இவளது சிறிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது உய்ந்ததாகும்;
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சேவல், நோக்கி, சிறிய, புரவி, நனைந்த, மாலை