முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 41. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 41. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)
காதலர் உழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலம்பில் போலப் புல்லென்று |
5 |
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. | |
- அணிலாடு முன்றிலார். |
முடிபு: தோழி, காதலர் உழையராகப் புகல்வேன்; அவர் அகன்ற ஞான்று அலப்பென்.
கருத்து: தலைவர் பிரிந்தமையின் வருத்தமுடையேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 41. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவி, அகன்ற, தோழி, அவர், சென்ற, அலப்பென், தலைவர், காதலர், எட்டுத்தொகை, சங்க, காலத்தில், புகல்வேன், அணிலாடு