முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 39. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 39. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலையுடை அருஞ்சுரம் என்பநம் முலையிடை முனிநர் சென்ற ஆறே. |
|
- அவ்வையார். |
முடிபு: முனிநர் சென்ற ஆறு அருஞ்சுரமென்பர்.
கருத்து: தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 39. பாலை - தலைவி கூற்று, சென்ற, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, பாலை, கூற்று, கூறுவர், முனிநர், கொடுமையை, கடத்தற்கரிய, எட்டுத்தொகை, வழியானது, சங்க