முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 40. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 40. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)
யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. |
5 |
- செம்புலப் பெயனீரார். |
முடிபு: யாயும் ஞாயும் யாராகியர்? எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? நெஞ்சம் கலந்தன.
கருத்து: இனிப் பிரிவரிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 40. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, நெஞ்சம், குறிஞ்சி, யானும், குறுந்தொகை, நீயும், செம்புலப், தாயும், தந்தையும், நின், எவ்வழி, எந்தையும், எட்டுத்தொகை, சங்க, யாயும், ஞாயும், நுந்தையும்