முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 368. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 368. மருதம் - தலைவி கூற்று
(வரைவுக்குரிய முயற்சிகள் மிகுதியாக நிகழ்தலைத் தோழியால் உணர்ந்த தலைவி, “இதுகாறும் மாமையை இழந்து துன்புற்றேன்; இனிஇடையீடின்றித் தலைவனோடு இன்புறுவேன்” என்று கூறியது.)
மெல்லிய லோயே மெல்லிய லோயே நன்னாண் நீத்த பழிதீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற் சொல்ல கிற்றா மெல்லிய லோயே சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே |
5 |
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத் திண்கரைப் பெருமரம் போலத் தீதில் நிலைமை முயங்குகம் பலவே. |
|
- நக்கீரனார். |
முடிபு: மெல்லியலோயே, மாமை சொல்லகிற்றாம்; ஊர்க்கு முயங்குகம்.
கருத்து: இனி யாதொரு தீங்குமின்றித் தலைவரோடு கூடி யிருப்பேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 366 | 367 | 368 | 369 | 370 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 368. மருதம் - தலைவி கூற்று, மெல்லிய, இலக்கியங்கள், தலைவி, மருதம், குறுந்தொகை, கூற்று, லோயே, இயல்பை, முயங்குகம், சங்க, எட்டுத்தொகை, மாமை