முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 367. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 367. மருதம் - தோழி கூற்று
(தலைவன் வரைந்து கொள்வானென்பதைத் தலைவிக்கு உணர்த்திய தோழி அவள் உவகை மீதூராமலிருக்கும் பொருட்டு, “தலைவர் தண்ணளிசெய்யாராயினும், அவர் மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக” என்று கூறியது.)
கொடியோர் நல்கா ராயினும் யாழநின் தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர் உவக்காண் தோழி அவ்வந் திசினே தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப் பூச லாயம் புகன்றிழி அருவியின் |
5 |
மண்ணுறு மணியின் தோன்றும் தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே. |
|
- மதுரை மருதனிள நாகனார். |
முடிபு: தோழி, கொடியோர் நல்காராயினும்நின் தோள் கவின் பெறீஇயர், மலையை அவ்வந்திசின்; உவக்காண்.
கருத்து: நீ தலைவரது மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 365 | 366 | 367 | 368 | 369 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 367. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, மருதம், உவக்காண், யுடைய, மலையை, பெறீஇயர், மலையைக், எட்டுத்தொகை, சங்க, கண்டு, கொடியோர்