முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 280. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 280. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன்னை இடித்து உரைத்த பாங்கனை நோக்கித் தலைவன் தலைவியினது அருமையைக் கூறியது.)
கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. |
5 |
- நக்கீரனார். |
முடிபு: கேளிர், வாழி! கேளிர், குறுமகள் ஆகம் ஒரு நாள் புணரப் புணரின் யான் வேண்டலென்.
கருத்து: தலைவி எனக்கு இன்றி அமையாதவள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 278 | 279 | 280 | 281 | 282 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 280. குறிஞ்சி - தலைவன் கூற்று, கேளிர், தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, புணரின், வேண்டலென், நாள், யான், புணரப், தலைவியினது, எட்டுத்தொகை, சங்க, கொண்ட, குறுமகள்