முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 278. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 278. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து, நீ ஆற்றுதல் வேண்டுமென்றுவற்புறுத்தும் தோழியை நோக்கித் தலைவி, "அவர் எம்மை நினையாதுகொடியராயினர்" எனக் கூறியது.)
உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து முறிகண் டன்ன மெல்லென் சீறடிச் சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார் கொடியர் வாழி தோழி கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந் |
5 |
தேற்பன ஏற்பன உண்ணும் பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே. |
|
- பேரி சாத்தனார். |
முடிபு: தோழி, மலையிறந்தோர் உள்ளார் கொடியர்.
கருத்து: தலைவர் எம்மை நினைந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 276 | 277 | 278 | 279 | 280 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 278. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, பாலை, குறுந்தொகை, கூற்று, உடைய, இருந்து, சிறிய, தலைவர், அவர், எட்டுத்தொகை, சங்க, எம்மை, உள்ளார், கொடியர்