முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 281. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 281. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தவிடத்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக அவளை நோக்கி, "தலைவர் கொடிய பாலை நிலத்தைக்கடந்தனரோ என்னும் வருத்தத்தால் ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின் கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட் டத்த வேம்பி னமலை வான்பூச் சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் குன்றுதலை மணந்த கானம் |
5 |
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. | |
- குடவாயிற் கீரத்தனார். |
முடிபு: சேயிழை, நமர் கானம் சென்றனர் கொல்?
கருத்து: தலைவர் பாலையைக் கடந்து சென்றனரோ? இலரோ?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 279 | 280 | 281 | 282 | 283 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 281. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, உடைய, வெள்ளிய, தலைவர், குறுந்தொகை, கூற்று, உள்ள, கடந்து, சென்றனரோ, சேயிழை, எட்டுத்தொகை, கானம், சென்றனர், சங்க