முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 217. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 217. குறிஞ்சி - தோழி கூற்று
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)
தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும் இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல் யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத் தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற |
5 |
ஐதே காமம் யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. |
|
- தங்கால் முடக்கொல்லனார். |
முடிபு: என யான் கூறிய அனைத்திற்கு நாடன் உயிர்த்தோன்; காமம் ஐது; யான் முதுக்குறைமையும் பழியும் என்றிசின்.
கருத்து: தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 215 | 216 | 217 | 218 | 219 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 217. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, தலைவன், யான், தோழி, கூற்று, குறுந்தொகை, நாடன், உயிர்த்தோன், காமம், கூறிய, குறியும், எட்டுத்தொகை, சங்க, உடன்போக்கை, கூறி