முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 215. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 215. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)
படரும் பைப்பயப் பெயருஞ் சுடரும் என்றூழ் மாமலை மறையும் இன்றவர் வருவர்கொல் வாழி தோழி நீரில் வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக் |
5 |
கொடுவரி இரும்புலி காக்கும் நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. |
|
- மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார். |
முடிபு: தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!
கருத்து:தலைவர் இன்று வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 213 | 214 | 215 | 216 | 217 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 215. பாலை - தோழி கூற்று, தோழி, பாலை, இலக்கியங்கள், இன்று, தலைவர், வருவர், கூற்று, குறுந்தொகை, வாழி, உடைய, மறையும், நீங்கும், எட்டுத்தொகை, சங்க, படரும், என்றூழ்