முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 218. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 218. பாலை - தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம் உள்ளலு முள்ளா மன்றே தோழி உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின் |
5 |
றிமைப்புவரை யமையா நம்வயின் மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. |
|
- கொற்றனார். |
முடிபு: தோழி, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, கடனும் பூணாம்; யாவாம்; ஓராம்; நில்லாம்; உள்ளாம்.
கருத்து: நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர்கடனாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 216 | 217 | 218 | 219 | 220 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 218. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, பாலை, குறுந்தொகை, கூற்று, நில்லாம், ஓராம், வல்லியோர், யாவாம், நம்மை, எட்டுத்தொகை, சங்க, அவர், மறந்து, கடனும்