முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 213. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 213. பாலை - தோழி கூற்று
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால்தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையைஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக் கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப் பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல் ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற் றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி |
5 |
நின்றுவெயில் கழிக்கு மென்பநம் இன்றுயில் முனிநர் சென்ற வாறே. |
|
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார். |
முடிபு: தோழி, நசை நன்குடையர், முனிநர், அவர் சென்ற ஆறுகலை வெயில் கழிக்கும் என்ப.
கருத்து: தலைவர் தம் கடமையை உணர்ந்து, மீளாது சென்றுபொருள் தேடி வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 211 | 212 | 213 | 214 | 215 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 213. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், சென்ற, பாலை, குறுந்தொகை, கூற்று, அவர், தனது, சங்க, எட்டுத்தொகை, முனிநர்