முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 190. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 190. முல்லை - தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான்துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச் செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர் அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள் |
5 |
நல்லே றியங்குதோ றியம்பும் பல்லான் தொழுவத் தொருமணிக் குரலே. |
|
- பூதம் புலவனார். |
முடிபு: தோழி, அகன்றோர் நடுநாள் ஏறு இயங்கு தோறியம்பும்மணிக்குரலை அறிவர்கொல்?
கருத்து: இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 188 | 189 | 190 | 191 | 192 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 190. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தலைவர், முல்லை, தோழி, குறுந்தொகை, அறிவர்கொல், நடுநாள், அறிவாரோ, படும், எட்டுத்தொகை, சங்க, துன்பத்தைத்