முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 189. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 189. பாலை - தலைவன் கூற்று
(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)
இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக் காலியற் செலவின் மாலை எய்திச் |
5 |
சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ணாக மணந்துவக் கும்மே. |
|
- மதுரை ஈழத்துப் பூதன்தேவனார். |
முடிபு: இன்றே சென்று நாளை வருவது. தேர் முடுக, நேமிதுமிப்ப,மாலை எய்திக் குறுமகள் ஆகம் மணந்து உவக்குவம்.
கருத்து: இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால்நாளை மாலையில் வந்து எய்துவோமாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 187 | 188 | 189 | 190 | 191 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 189. பாலை - தலைவன் கூற்று, சென்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, கூற்று, குறுந்தொகை, குறுமகள், வெள்ளிய, நாளை, தேர், மணந்து, மாலை, வினைமுடித்து, எட்டுத்தொகை, சங்க, இன்றே, வருவது, முடுக