முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 192. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 192. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)
ஈங்கே வருவர் இனையல் அவர்என அழாஅற்கோ இனியே நோய்நொந் துறைவி மின்னின் றூவி இருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந்தாது கொழுதும் பொழுதும் |
5 |
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே. | |
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
முடிபு: “நோய் நொந்துறைவி, இனையல்” என அழா அற்கோ?வறுங்குரற் கூந்தல் தைவருவேன்.
கருத்து: தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 190 | 191 | 192 | 193 | 194 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 192. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, வறுங்குரற், தோழி, கூந்தல், சங்க, எட்டுத்தொகை, வருவர்