முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 135. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 135. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வேறுபட்ட தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிரென நமக்குரைத் தோருந் தாமே அழாஅல் தோழி அழுங்குவர் செலவே. |
|
- பாலைபாடிய பெருங் கடுங்கோ. |
முடிபு: தோழி, உரைத்தோரும் தாமே; அழாஅல்; செலவு அழுங்குவர்.
கருத்து: தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 135. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, அழாஅல், அழுங்குவர், உயிர், தாமே, மகளிர்க்கு, எட்டுத்தொகை, சங்க, தலைவர்