முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 137. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று
(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)
மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே. |
|
- பாலை பாடிய பெருங் கடுங்கோ. |
முடிபு: அரிவை, நின் அகம் புலம்ப நிற்றுறந்து அமைகுவெனாயின் யான் செலவுறு தகவு இரவலர் வாரா வைகல் பலவாகுக.
கருத்து: நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 135 | 136 | 137 | 138 | 139 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவன், கூற்று, யான், குறுந்தொகை, செலவுறு, நின், வைகல், நின்னைப், வாரா, எட்டுத்தொகை, புலம்ப, சங்க