முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 133. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 133. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுங்காலம் இருந்தானாக, வருந்திய தலைவி, “என் நலத்தை இழந்தும் தலைவர் வரைவாரென்னும் கருத்தினால் இன்னும் உயிர்தாங்கி நிற்கின்றேன்” என்று கூறியது.)
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை கிளிகுறைத் துண்ட கூழை யிருவி பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென் உரஞ் செத்தும் உளெனே தோழியென் நலம்புதி துண்ட புலம்பி னானே. |
5 |
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார். |
முடிபு: தோழி, புலம்பினான் உரஞ்செத்தும் உளென்.
கருத்து: தலைவர் அருள் செய்வாரென்று இன்னும் உயிர் தாங்கி நிற்கின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 131 | 132 | 133 | 134 | 135 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 133. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, இன்னும், குறுந்தொகை, கூற்று, தலைவர், எனது, தோழி, சங்க, எட்டுத்தொகை, துண்ட