கலித்தொகை - நெய்தற் கலி 130
| 'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும், இவனின் தோன்றிய, இவை' என இரங்க, புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல், நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செய, | 5 |
|
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை; இம் மாலை, ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! | 10 |
|
இம் மாலை, இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்! இம் மாலை, கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என் | 15 |
|
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்! என ஆங்கு, படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை, குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் | 20 |
| தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே; |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 128 | 129 | 130 | 131 | 132 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மாலை, நெஞ்சம், போல், புலம்பு

