கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி; மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி; படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, | 5 |
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல், கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து, பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள், வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? | 10 |
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள, தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால், முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ? என வாங்கு; பாணியும், தூக்கும், சீரும், என்று இவை | 15 |
மாண் இழை அரிவை காப்ப, வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்