கலித்தொகை - நெய்தற் கலி 129
தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால், பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல், எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய; நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின், அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா | 5 |
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர; எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை; பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்! 'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம் நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் | 10 |
காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! 'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ | 15 |
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்! 'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ என ஆங்கு, | 20 |
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட, பெரும் பேதுறுதல் களைமதி, பெரும! வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே. | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உடையையோ, எனக், கலங்கிய, அழிந்து, அகன்றாரை, செய்து, கதிர், நெறி, இருள், இடும்பை, போல்