கலித்தொகை - முல்லைக் கலி 115
| 'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர, நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு, கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம் புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! | 5 |
|
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ; அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், | 10 |
|
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என் சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி, பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! | 15 |
|
ஈங்கு எவன் அஞ்சுவது; அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும் அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண் வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், | 20 |
| அல்கலும் சூழ்ந்த வினை.' |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - செய்யாள், யாய், பெய்து, தோழி

