கலித்தொகை - முல்லைக் கலி 114
வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால், வதுவை அயர்வாரைக் கண்டும் 'மதி அறியா ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ | 5 |
தோழி! அவனுழைச் சென்று; சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி; 'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா! நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று; நினக்கு வருவதாக் காண்பாய்' அனைத்தாகச் | 10 |
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு; தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி, எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும் பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த | 15 |
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும், அரு நெறி ஆயர் மகளிர்க்கு | 20 |
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 112 | 113 | 114 | 115 | 116 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மணம், மற்று, என்று, மணல், நினக்கு, எமர், சென்று