அகநானூறு - 179. பாலை
| விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, சிறு கண் யானை நெடுங் கை நீட்டி வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
5 |
| கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் நல் நிலை பொறித்த கல் நிலை அதர, அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
10 |
| முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் மதி ஏர் வாள் நுதல் புலம்ப, பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 177 | 178 | 179 | 180 | 181 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிலை, வாய்

