அகநானூறு - 178. குறிஞ்சி
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
5 |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
10 |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
15 |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி 'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
20 |
முன் தான் கண்ட ஞான்றினு ம் பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 176 | 177 | 178 | 179 | 180 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, தோழி