இலிங்க புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
இவ்வரங்களைப் பெற்ற ததீசி கபாவிடம் சென்று அவனை எட்டி உதைத்தான். உடனே கபா தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தை ததீசியின் மார்பை நோக்கி அடித்தார். ஆனால் என்ன அதிசயம்! வஜ்ராயுதம் இரும்பில் பட்டுத் தெறித்தது போல், கணிரென்ற சப்தத்துடன் கீழே விழக் கண்டான். ததீசியிடம் தன் கைவரிசை செல்லாது என்பதை அறிந்த கபா, விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். விஷ்ணு தோன்றியவுடன், ததீசியை வெல்வதற்குரிய ஆயுதம் ஒன்று வேண்டும் என்று கபா கேட்டவுடன், விஷ்ணு ததீசி சிவனிடம் பெற்ற வரங்கள் காரணமாக அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான் ஏழை பிராமண வடிவத்தில் சென்று ததீசியிடம் ஏதாவது செய்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் பிச்சை ஏற்கப் போகும் பிராமண வடிவத்தில் ததீசியிடம் வந்தான் விஷ்ணு. இவருடைய சூழ்ச்சியை எளிதாக அறிந்து கொண்ட ததீசி, “பிராமண வடிவத்தில் வருகின்ற விஷ்ணுவே வருக உம்மையும் உம்முடைய வேஷத்தையும் என்னால் கண்டு கொள்ள முடியாதென நினைத்தீரா? அல்லது பிராமண வடிவத்தில் வரும் தாம் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன் என்று நினைத்தீரா.”
“விஷ்ணுவே! உம்முடைய உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமெனக் கோரும், பார்க்கலாம் என்றான். உடனே விஷ்ணு, ததீசி, நான் கடாவைக் கூட்டிக் கொண்டு இங்கு வருகிறேன். அவனைக் கண்டவுடன், எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல் என்று சொல்லி விட்டுப் போன விஷ்ணு, உடனடியாக கடாவை அழைத்துக் கொண்டு ததீசியின் முன் வந்து நின்றான். ததீசி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நான் ஒரு சிவபக்தன், என்னை யாராலும், எந்த ஆயுதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றான். இதைக் கேட்ட விஷ்ணு கோபம் அடைந்து சுதர்சன சக்ரத்தை விட அது ததீசியை ஒன்றும் செய்யாமல் பூமியில் விழுந்தது. இந்த நிலையில் ததீசி 'விஷ்ணுவே! ஏன் சும்மர் இருக்கிறீர். உம்முடைய பிரம்மாஸ்திரம் விட்டுப் பாரும். விஷ்ணு பிரம்மாஸ்திரம் விட அதுவும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது மற்ற தேவர்கள் எல்லாம் துணைக்கு வந்து, ததீசியின் மேல் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகித்தனர். அவை அனைத்தும் ததீசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாகச் சலித்துப் போன ததீசி கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து தேவர்கள் மேல் விட்டான். அந்தத் துரும்பு சிவனின் பல திரிசூலங்களாக மாறி, தேவர்களை விரட்டத் துவங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்க புராணம் - பகுதி 5 - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ததீசி, விஷ்ணு, கொண்டு, ஒன்றும், பிராமணன், வடிவத்தில், பிராமண, உம்முடைய, செய்ய, நான், ததீசியை, என்ன, வரத்தின்படி, ததீசியின், ததீசியிடம்