இலிங்க புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
சுதர்சன முனிவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தம் மனைவியிடம், வரும் விருந்தினர்களை எவ்வாறு அன்புடன் உபசரிக்க வேண்டும் என்றும், விருந்தினர்களை உதாசீனப் படுத்துவது சிவபெருமானை அவமானப்படுத்துவது போலாகும் என்றும், விருந்துண்ண வருபவர் ஒவ்வொருவரும் சிவபெருமான் என்றே எண்ண வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஒரு சமயம், தர்ம தேவதை சுதர்சன முனிவரையும் அவர் மனைவியையும் பரீட்சை செய்து பார்க்க விரும்பினார் பிராமண வடிவம் கொண்டு, அவர்கள் வீட்டிற்கு வந்தார் முனிவர் வீட்டில் இல்லாத பொழுதும், அவர் மனைவி தர்ம தேவதையினை நன்கு உபசரித்து அன்புடன் உணவு படைத்தார். மிகவும் மனம் மகிழ்ந்த தர்ம தேவதை அவ்விருவரும் சொர்க்கம் செல்ல ஆசி வழங்கினார்.
இக்கதையினை பிரம்மன் கூறக்கேட்ட முனிவர்கள், தாம் சிவபெருமானை அவமதித்ததை நினைத்து வருந்தி, அவர் மனம் மகிழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் சுவேதாவின் கதையைக் கூறத் தொடங்கினார்.
சுவேதா முனிவரின் கதை: முன்னொரு காலத்தில் சுவேதா என்ற முனிவர் சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டிருந்தார். எந்நேரமும் சிவபெருமானையே வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையைவிட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. யமதேவன் சுவேதா முனிவர் முன் தோன்றினான். யமனைக் கண்டு சுவேதா முனிவர் சிறிதும் மனம் கலங்கவில்லை. சிவபெருமானை வணங்கினால், இறப்பினால் எத்துன்பமும் ஏற்படாது என்று நினைத்து, சிவனை வழிபடத் துவங்கினார். யமதேவன் சுவேதா முனிவரைப் பார்த்து, "உன்னுடைய நேரம் இப்பூமியில் முடிந்து விட்டது. இனி நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும், சிவனை வணங்குவதால் எப்பயனும் இல்லை, வா. சீக்கிரம் போக வேண்டும்” என்றான். அவரைக் கெகாண்டு செல்வதற்காக எல்லா ஆயத்தங்களும் செய்யும் பொழுது, சிவபெருமான் பார்வதி, நந்தி மற்றும் சிவகணங்களுடன் அங்கு வந்தார். சிவனுடைய பார்வை பெற்றவுடன் யமதேவன் மயக்கமுற்று வீழ்ந்து மரணமடைந்தான். சுவேத முனிவர் காப்பாற்றப் பெற்றார்.
இக்கதையைக் கூறி முடித்த பிரம்மா, முனிவர்களைப் பார்த்து, சிவபெருமானை வணங்குவதால் ஏற்படும் பயனைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? உடனே சென்று சிவ பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். முனிவர்களும் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு வருடம் கடுமையான தவத்திற்குப் பிறகு அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார். கடுமையான விழிகளும், சாம்பலை உடல் மீது பூசிக்கொண்டு, அழகற்ற உருவத்துடன் தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டில் இங்கும் அங்கும் உலாவினார். முனிவர்களும் இம்முறை சிவபெருமானைத் தெரிந்து கொண்டு தம் மனைவியருடன் மலர்களால் அர்ச்சித்தனர். சிவபெருமான் மனமகிழ்ந்து அம்முனிவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறினார். அவற்றுள், சாம்பல் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் அவர்கட்கு அறிவுரை கூறினர்.
ததீசி கதை: ததீசி என்ற பிராமணனும், கபா என்ற அரசனும் நண்பர்களாய் இருந்தனர். கபா சத்திரியனாகவும், ததீசி பிராமணனாகவும் பிறந்திருந்தாலும், இருவரும் இணையற்ற அன்பு பூண்டு வாழ்ந்து வந்தனர். ஒருமுறை பிராமணன் உயர்ந்தவனா, சத்திரியன் உயர்ந்தவனா என்ற வாதம் இவர்களுக்குள் தோன்றி அந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறிவிட்டது. ததீசி என்ற பிராமணன் தான் பிராமணன் என்ற கர்வம் கொண்டு, தான் யாரை வேண்டுமானாலும், எது
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்க புராணம் - பகுதி 4 - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, முனிவர், அவர், சுவேதா, சிவபெருமான், ததீசி, வந்தார், சிவபெருமானை, வேண்டும், யமதேவன், சிவனை, அன்புடன், பிராமணன், தர்ம, என்றும், கூறினார், பார்த்து, கொண்டு, மனம்