இலிங்க புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்ட பிரம்மா, தான் தலையிட்டு “விஷ்ணுவே, சிவபக்தனாகிய இவனை உம்மால் வெல்ல முடியாது. இருவரும் சமாதானமாகப் போய் விடுங்கள்” என்று கூறி அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த, பின்னர் சத்திரியனாகிய கபா சிவபக்தனாகிய ததீசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
நந்தியின் கதை: இக்கதை முன்னமே சிவபுராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (நந்தி தோற்றம் பற்றிச் சிறு மாறுபாடு உள்ளது. சிவபுராணத்தில், நந்தி, கலப்பையின் கொழு முனையில் குழந்தையாக வந்தது என்றும், லிங்க புராணத்தில் ஷிலதா வளர்த்த யாக குண்ட அக்னியில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது).
லிங்க புராணத்தில் இதனை அடுத்து யுகங்கள் பற்றி விரிவாகவும், பதினான்கு லோகங்கள், ஏழு துவீபங்கள் பற்றியும், சூரியன் பன்னிரண்டு மாதங்களில் வெவ்வேறு பெயருடன் சஞ்சரிப்பதையும் விரிவாகப் பேசுகின்றது. (இவை பற்றி முன்னருள்ள பல புராணங்களில் கூறியுள்ளமையால் இங்கே இவற்றை விவரிக்கவில்லை).
(இவற்றை அடுத்து வரும் துருவ நட்சத்திரம் பற்றிய கதையும், தட்சன் பற்றிய கதையும் முன்னரே கூறப்பட்ட தா.கவின் இங்கே விவரிக்கப்படவில்லை)
பராசர முனிவர் கதை: முன்னொரு காலத்தில் கல்மஷ பாதன் என்ற அரசனும், ருத்ரா என்ற அசுரனும் அடுத்தடுத்த இடங்களில் வாழ்ந்து வந்தனர். வசிட்டன் மகன் சக்த்ரியும், அவன் சகோதரர்களும் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர். ருத்ரா என்ற அசுரன் அழகிய அப்பிள்ளைகளைப் பிடித்துச் சாப்பிட வேண்டும் எனப் பலகாலமாக நினைத்து வந்தான். ஆனால் அவன் அசுரன் என்ற காரணத்தால் வசிட்ட குமாரர்கள் அவனை நெருங்குவதே இல்லை. இதற்காக ருத்திரா ஒரு சூழ்ச்சி செய்தான். அரசனாகிய கல்மஷபாதனுடைய உடம்புக்குள் இந்த அசுரன் புகுந்து கொண்டான். அரசனிடத்தில் அடிக்கடி வந்து போகும் பழக்கமுள்ள வசிட்ட குமாரர்கள் இப்பொழுது தாங்கள் பார்க்க வரும் அரசன் கல்மஷபாதன் பழைய கல்மஷ பாதன் அல்லன். அவ்வுடம்பினுள் ருத்ரா என்ற அசுரன் ஒளிந் திருக்கிறான் என்பதை அறியாத அக்குமாரர்கள் அப்பாவித் தனமாக அரசனிடம் வர, அவனுள் இருந்த ருத்ரா என்ற அசுரன் அவர்கள் நூறு பேரையும் பிடித்துத் தின்றுவிட்டான்.
இச்செய்தி அறிந்த வசிட்டனும், அவன் மனைவி அருந்ததியும் தாங்க முடியாத புத்திர சோகத்தால் உணர்வு இழந்தனர். செய்வதறியாத அவ்விருவரும் ஒரு மலையில் ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அவ்வாறே செய்தனர்.
இவ்வளவு நல்ல ஒரு முனிவரும், கற்புக்கரசியான அருந்ததியும் அநியாயமாக சாவதை பூமிதேவியே ஏற்கவில்லை. எனவே கீழே விழுகின்ற இருவரையும், பூமி தேவி தாங்கிப் பிடித்து அவர்களை நிறுத்தி, அவர்கள் செய்வது தவறு அவர்களால் இவ்வுலகத்திற்கும் பல அரசர்களுக்கும் நற்காரியங்கள் பல நிகழ வேண்டி இருத்தலின் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவறு என அறிவுரை வழங்கினாள் பூமி தேவி. அதே நேரத்தில் தின்னப்பட்ட வசிட்டனின் மூத்த மகன் சக்திரியின் மனைவியாகிய அத்ரிஷ் யந்தி ஓடிவந்து, மாமனை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்க புராணம் - பகுதி 6 - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அசுரன், ருத்ரா, அனைத்தும், அவன்