இலிங்க புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
அந்தகனைப் பொறுத்தவரை, சிவபெருமானின் சூலாயுதத்தால் குத்தப்பட்ட நொடிப்பொழுதிலிருந்து, அவனுடைய கெட்ட எண்ணங்கள் அனைத்தும் அவன் மனத்திலிருந்து விலகிவிட்டன. அவன் சிவனை தியானிக்க ஆரம்பித்தான். அவன் தியானத்தில் மனம் மிக மகிழ்ந்த சிவபெருமான் அந்தகனை நோக்கி, “ஹிரண்யாக்ஷாவின் மகனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதைக் கேட்ட அந்தகனும், "ஐயனே! நான் என்றென்றும், எப்பொழுதும் உன்னை நினைத்து, உனக்கு நன்றியுடைய வனாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் உன்னுடனேயே நான் இருக்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்ள, சிவனும் 'அப்படியே ஆகட்டும்’ என்றார். அந்தகனைத் தன் சூலாயுதத்தினின்று விடுவித்து சிவ கணங்களின் தலைவனாக்கினார்.
ஹிரண்யகசிபுவும் நரசிம்ம அவதாரமும்
(இக்கதை ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.) ஹிரண்யகசிபுவைக் கொன்ற பின்பும், விஷ்ணு தன் நரசிம்ம அவதாரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நரசிம்மம் உலகத்தில் அங்கும் இங்கும் ஒடி, எல்லாவற்றையும் அழித்துவிட ஆயத்தமானது. தேவர்கள், பிரம்மனின் உதவி யுடன், மந்தரமலைக்குச் சென்று சிவபிரானை வேண்டினர். சிவனும் தான் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினார்.
சிவபெருமான் தன் உடம்பினின்று வீரபத்ரன் என்ற தேவதையைத் தோற்றுவித்தார். சிவபிரானைப் போலவே மூன்று கண்களும், பல ஆயுதங்களைக் கையில் ஏந்தியும் இருந்தார். சிவபெருமானை வணங்கி, என்ன செய்யவேண்டும் எனக் கேட்டான். சிவபெருமானும் அவரிடம் "வீரபத்ரனே ! நரசிம்மம் ஒன்று இங்கு உலவிக் கொண்டு, பெரும் துன்பத்தை விளைவிக்கிறது. அது வேறு யாருமல்ல, விஷ்ணுவேதான். முதலில் நீ சமாதானமாக அந்த அவதாரத்தை விட்டுவிடச் சொல். அவ்வாறு செய்வதற்கு மறுத்தால், கொன்று விடு” எனக் கூறினார்.
வீரபத்ரன் உடனே, நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம், “விஷ்ணுவே! நீரே இந்த உலகத்தைக் காப்பவர். இவ்வுலகைக் காக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் பல அவதாரங்கள் எடுத்துள்ளிர்கள். அவ்வாறு இருக்க, இப்பொழுது ஏன் நரசிம்ம அவதாரத்தை மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள். இது உலகையே அழித்து விடும் அபாயத்தைக் கொடுக்கிறது” என்று அமைதியுடன் கூறினார்.
இதைக் கேட்ட விஷ்ணு கோபத்துடன், “எனக்கு புத்திமதிகள் சொல்வதற்கு நீ யார்? நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ, நான் இவ்வுலகை அழிக்கப் போகிறேன். நான் எல்லாவற்றிற்கும் தலைவனாவேன். இவ்வுலகை உண்டாக்கிய பிரம்மா, என்னிலிருந்து பிறந்தவன், ஆதலால் இவ்விடத்தை விட்டு அகன்றுவிடு” என்று வீரபத்ரனிடம் கூறினார்.
வீரபத்ரன் உடனே, நீ சிவபெருமானை மறந்து விட்டாயா? அவரே அழிக்கும் கடவுள். அவரே எல்லாவற்றிற்கும் முதன்மையானவர். நீ பழைய நிலைக்கு வரவில்லையெனில் சிவன் உன்னை அழித்து விடுவார். நானே வீரபத்திரன். தக்கன் யாகத்தில் உன் தலையை வெட்டியவன் நான் என்பதை மறந்துவிட்டாயா எனக்கூறி தன் உருவத்தை மாற்றிக் கொண்டார். மாறும் பறவையைச் சேர்ந்த வடிவம் (சரப மூர்த்தி) எடுத்து, நரசிம்மத்தைத் தாக்கி வானில் எறிந்தார். கீழே விழுந்தவுடன் மீண்டும், மீண்டும் தூக்கி எறிந்தார். உடனே விஷ்ணு தன் நினைவு வரப்பெற்று சிவபெருமானை நூற்றிஎட்டு பெயர்கள் கூறி, வழிபட்டார். வீரபத்திரனும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்க புராணம் - பகுதி 8 - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நான், விஷ்ணு, கூறினார், அவன், நரசிம்ம, சிவபெருமானை, வீரபத்ரன், உடனே, மாற்றிக், வேண்டும், அவதாரத்தை, இருக்க