இலிங்க புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
இதனை அடுத்து பிரம்மன் சனகன், சனந்தா, சனாதன ஆகிய மூன்று மகன்களையும் பெற்றார் என்று இப்புராணம் கூறுகிறது. (சனத்குமாரன் என்ற நான்காவது பிள்ளையையும் பெற்றான் என்பதை மற்ற புராணங்கள் சொல்லுகின்றன) இதன் பிறகு ஒன்பது முனிவர்கள், சுயம்பு மனு ஆகியவரின் தோற்றம் பற்றி ஏனைய புராணங்கள் போலவே இலிங்க புராணமும் பேசுகிறது.
யோகம்
யோகத்தின் இயல்பு, அதன் இலக்கணம், பயிற்சி முறை ஆகியவற்றை ஏனைய புராணங்களைப் போலவே இலிங்க புராணமும் கூறுகிறது. சிவனுக்குப் பசுபதி என்ற பெயர் உண்டு என்பதும், சிவன் கற்பித்த முறையில் யோகத்தைப் பயில்வது பாசுபத யோகம் எனப்படும். ஒவ்வொரு கல்பத்திலும் இந்த யோகத்தைக் கற்பிப்பதற்காக சிவன் யோகேஸ்வரன் என்ற பெயரில் வடிவெடுக்கிறார். இதுவரை நடை பெற்ற 28 கல்பங்களில் ஒவ்வொரு கல்பத்திற்கும் சுவேதா யோகேஸ்வரா, சுதார யோகேஸ்வரா, மதன யோகேஸ்வரா என்ற வெவ்வேறு பெயர்களுடன் சிவன் வடிவெடுக் கிறார். ஒவ்வொரு முறை இவர் வடிவெடுக்கும் பொழுதும் இவருக்கு நான்கு சீடர்கள் உள்ளனர். ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்தில் உள்ள துவாபரயுகத்தில் வேத வியாசர் என்ற பெயருடன் சிவன் வடிவெடுக்கிறார். 28 வேத வியாசர்களுள் சில பெயர்கள் வருமாறு:- சத்யா, பார்கவா, கிராது, அங்கீரா, வசிஷ்டா, அருணி ஆகியவை ஆகும்.
இலிங்கம்
லோமஹர்ஷனர் மற்ற முனிவர்களுக்குக் கூறிய இலிங்கம் பற்றிய கதை பிரம்மா, விஷ்ணு இருவரும் இலிங்கத்தின் அடி முடி தேடிய கதை முன்னரே சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள புதிய பகுதி வருமாறு: இலிங்கத்தின் இடையே தோன்றிய சிவன் படைக்கும் தெய்வ மாகிய பிரம்மனும் காக்கும் தெய்வமாகிய விஷ்ணுவும், அழிக்கும் தெய்வமாகிய நானும் ஒரே பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆவோம். நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளுதல் தேவை இல்லை. இலிங்கத்தில் இருந்துதான் அனாதியான முட்டை தோன்றிற்று' என்று கூறிவிட்டு, இலிங்கத்தில் தோன்றிய சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவருக்கும் சிவகாயத்திரி உபதேசம் செய்தார்.
பிரம்மனும், விஷ்ணுவும் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பிரம்மாவை மட்டும் விஷ்ணுவின் பிள்ளை கூறுகிறார்களே, அது ஏனென்று கேட்க, லோம ஹர்ஷனர் கூற ஆரம்பித்தார்.
'முன்னொரு காலத்தில், பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந்திருந்தது. தண்ணின் மேல் படுத்திருந்த நாராயணன் பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம்முடைய கொப்பூழைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு மாபெரும் தாமரைப் பூ கொப்பூழினின்று வெளிப்பட்டது. அந்த இதழ்களின் நடுவே பிரம்மன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிலகாலம் கழித்து அந்தத்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்க புராணம் - பகுதி 2 - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், ஆகிய, ஒவ்வொரு, பிரம்மா, விஷ்ணு, யோகேஸ்வரா, போலவே, இவர், பிரம்மன்