தொல்காப்பியம் - மொழி மரபு
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. | 1 |
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். | 2 |
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. | 3 |
இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே கடப்பாடு அறிந்த புணரியலான. | 4 |
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. | 5 |
ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். | 6 |
உருவினும் இசையினும் அருகித் தோன்றும் மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா ஆய்தம் அஃகாக் காலையான. | 7 |
குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. | 8 |
ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு இகர உகரம் இசை நிறைவு ஆகும். | 9 |
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. | 10 |
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. | 11 |
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. | 12 |
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். | 13 |
தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. | 14 |
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். | 15 |
அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. | 16 |
குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. | 17 |
செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். | 18 |
னகாரை முன்னர் மகாரம் குறுகும். | 19 |
மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். | 20 |
அகர இகரம் ஐகாரம் ஆகும். | 21 |
அகர உகரம் ஔகாரம் ஆகும். | 22 |
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். | 23 |
ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே தேரும் காலை மொழிவயினான. | 24 |
இகர யகரம் இறுதி விரவும். | 25 |
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். | 26 |
உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. | 27 |
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. | 28 |
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. | 29 |
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் வ என் எழுத்தொடு வருதல் இல்லை. | 30 |
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. | 31 |
ஆவொடு அல்லது யகரம் முதலாது. | 32 |
முதலா ஏன தம் பெயர் முதலும். | 33 |
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். | 34 |
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது அப் பெயர் மருங்கின் நிலையியலான. | 35 |
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். | 36 |
க வவொடு இயையின் ஔவும் ஆகும். | 37 |
எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. | 38 |
ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. | 39 |
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. | 40 |
உ ஊகாரம் ந வவொடு நவிலா. | 41 |
உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. | 42 |
உப் பகாரம் ஒன்று என மொழிப இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. | 43 |
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. | 44 |
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப் பதினொன்றே புள்ளி இறுதி. | 45 |
உச் சகாரமொடு நகாரம் சிவணும். | 46 |
உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே அப் பொருள் இரட்டாது இவணையான. | 47 |
வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. | 48 |
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. | 49 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொழி மரபு - எழுத்ததிகாரம் - தொல்காப்பியம், Tholkappiam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்