சூடாமணி நிகண்டு - யகரயெதுகை
151 (1) | காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயங் கறி கரித்தல்
நேயம் நெய் எண்ணெய் யன்பாம் நிறமென்ப மருமங் காந்தி ஆயமே கவற்றிற்றாயம் ஆதாயம் மாதர்கூட்டம் சாயலென்பது மேம்பாடு தருமழகுடனே மென்மை. |
152 (2) | வய நீர் புட்பொது வலிப்பேர் வயல் வௌி பழனமும் பேர்
சயம் வெற்றி சருக்கரைப் பேர் சட முடல் வஞ்சம் பொய்யாம் நியமமே நியதி வீதி நிச்சயம் நகரங் கோயில் இயமென்ப வொலியே வார்த்தை வாச்சிய மிம்முப்பேரே. |
153 (3) | அயமென்ப நீர் தடாகம் ஆடு வெம்பரி யிரும்பாம்
கய மென்மை குளமே யாழங் களிறு கீழ் பெருமை தேய்வாம் பயமென்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேரைந்தே அயனமே வழியினாமம் ஆண்டினற் பாதியின்பேர். |
154 (4) | பயி ரோலி பயிலே பைங்கூழ் பறக்கும் புட்குரலின்நாற்பேர்
கயினியே அத்தநாளுங் கைம்மையும் யிருபேர் காட்டும் வயிரமே செற்றங் கூர்மை வச்சிரம் ஓர்மணியே சேகு கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர் இருபேர்தானே. |
155 (5) | ஐயமே பிச்சையேற்குமோ டனுமானம் பிச்சை
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்ப னீச்சுர னார்பேரே தொய்யலே யுழவுஞ் சேறும் துயருமும் மகிழ்சியும்பேர் மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரட்பேர். |
156 (6) | வயவனே வீரனோடு வலியான் காதலனு மாகும்
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுத னார்பேரே வய னிட முதரம் வீடாம் வயாக் கரு வருத்தங் காதல் மயல் செத்தை மயக்கம் பேயாம் மறவரே வயவர் வேடர். |
157 (7) | குயிலே கோகிலமுஞ் சொல்லும் கொண்டலுந் துளையு நாற்பேர்
வயமாவே குதிரை சிங்கம் மதகரி புலியு மாகும் வியலென்ப விசாலம் பீடாம் வேய்துளை வெற்று மூங்கில் மயிலையே மீனராசி மீ னிருவாட்சி முப்பேர். |
158 (8) | சயிந்தவங் குதிரையோடு தலையு மிந்துப்பு மாகும்
குயந்தனம் இளமையோடு கூரரிவாளு முப்பேர் நயந்தோன் நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை பயம்பென்ப தானைவீழும்படுகுழி பள்ளமாமே. |
159 (9) | இயல்நடைதமிழ் சாயற்பேர் ஏல்வையே பொழுது வாவி
குய்யென்ப கறிகரித்தல் குளிர்நறும்புகை யிரண்டாம் செயிரென்ப சினங் குற்றப்பேர் சேடி விஞ்சையரூர் பாங்கி உயவை காக்கணமே முல்லையுற்ற கான்யாறுமாமே. |
160 (10) | செய்யலே ஒழக்கங்காவல் சேறு செய்வினை நாற்பேரே
நெய்தலே கடற்சார்பூமி நெய்தற்பூச் சாபறைபேர் வெய்யோன் ஆதவனே தீயோன் வருப்பினன் றனக்கு மப்பேர் ஐயையே யுமையாள் துர்கை மக ளருந்தவப் பெண் ணாசாள். |
161 (11) | ஐ யழ கிடைச்சொல் கோழை யரசனோ டிருமல் சாமி
மையென்ப தஞ்சனங் கார் மல டிருள் ஆடு மாசாம் கையிடம் படையுறுப் பொப்பனை செங்கை சிறுமை சீலம் வையந் தே ரே றுரோணி வசுந்தரை சிவிகை யூர்தி. |
162 (12) | சேய் குகன் இளமை தூரஞ் செம்மை றனசண் சிறுமை செவ்வாய்
வாய் குழ லிடம் வாய்மைப்பேர் மாருதி யனுமன் வீமன் ஆய்தலே நுணுக்கந் தேர்தல் ஆறென்ப வழி நதிப் பேர் வேய்தல் சூடுதல் மூடற்பேர் விநாயகன் அருகன் முன்னோன். |
163 (13) | அயிர் தேங்கட்டி யான்ற நுண்மணலே நுண்மை
செயல் தொழி லொழுக்க மென்ப தெய்வமே கடவு ளூழாம் நயமென்ப மகிழ்ச்சி யின்பம் நன்மை நற்பயன் நாற்பேரே. பெயரென்ப பெருமை கீர்த்தி பேசு நாமப் பேராமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யகரயெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்