சிந்துப்பாவியல்
11.
- குறிலசை நீட்டம் அருகுதல் சிறப்பே
விளக்கம் : சிந்துப் பாடல்களில் ஓவ்வொரு சீரிலும் முதலசையாக வருவன மற்ற அசைகளினும் சற்றுக் கூடுதலாக அழுத்தம் (stress) பெறுகின்றன. அதற்கேற்றபடி அவ்வசைகளைப் பெரும்பாலும் நெடில், நெடிலொற்று, குறிலொற்றாகவே உள்ளன. தனிக்குறில் சீர் முதலில் பெரும்பாலும் வருவதில்லை.
காட்டு : ‘ஆறுமுக வடி வேலவனே’ என்ற பாடலில் முழுமையாக உள்ள 48 சீர்களிலும் முதலசையாக மூன்று தனிக்குறில்களே வருகின்றன. அவை க, ன, ரு.
ஆறுமு | க | வ | டி |
வெள்ளைத்த | ன | மா | கத் |
தங்குமு | ரு | கோ | னே |
காட்டு :
ஆறுமு | க | வ | டி |
வெள்ளைத்த | ன | மா | கத் |
தங்குமுரு | கோ | னே |
எனவே இறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் ஈரசையாய் நீளும் குறிலசையும், சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசையும் சிறப்பில்லாத அசைகள். ஆனதால் (சிறப்பிலசைகள் நூற்பா 13இல் காண்க) அவை சிந்துப் பாடல்களில் அருகி வருதல் (குறைந்த அளவில் வருதல்) சிறப்பாகும்.
12. சிறப்பசை
-
ஓரசை யாய்வரும் குறிலசை, ஓரசை
ஈரசை யாய்வரும் நெடிலசை சிறப்பசை
விளக்கம் : சிந்துப்பாடல்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும். ‘எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை’ என்பது இலக்கண வழக்கு.
-
“அவ்வெழுத்து
அசைத்து இசை கோடலின் அசையே”
(யா. கலம் நூ. 1. உரை மேற்கோள்)
குறிலசை என்பன : உயிர்க்குறிலும் (அ), உயிர்மெய்க் குறிலும் (க)
நெடிலசை என்பன
: உயிர்நெடிலும் (ஆ), உயிர்மெய் நெடிலும் (கா)
: உயிர்நெடில் ஒற்று (ஆல்), உயிர்மெய் நெடிலொற்று (கால்)
: உயிர்க்குறில் ஒற்று (அல்), உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
தனிச்சொல்லுக்கு முன்பும், அரையடியின் இறுதிகளிலும், அடியின் இறுதிகளிலும், அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசைக்கு மேலும் இசைக்கும் என்று முன்பு விளக்கப்பட்டதால் (நூற்பா.10) மற்ற இடங்களில் உள்ள அசைகள் ஓரசை, ஈரசைக்கு மேல் நீள்வதில்லை என்பது தெளிவாகிறது.
குறிலசையின் இயல்பு ஓரசையாய் ஒலிப்பது. நெடிலசையின் இயல்பு ஓர் அசையாகவோ, ஈரசையாகவோ ஒலிப்பது. இத்தன்மைகளிலிருந்து மாறாமல் வரும் குறிலசையும், நெடிலசையும் சிறப்பசைகள் என்று கொள்ளப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்